பானி புயல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத ஒடிசா: மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமம்

பூரி: ஒடிசா மாநிலத்தில் பானி புயல் தாக்கி, பல நாட்களுக்கு மேலாகியும், பூரி மாவட்டத்தில் இன்னும் மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை கடந்த 3ஆம் தேதி பானி புயல் தாக்கியது. இதில் ஏராளமான வீடுகள், மரங்கள்,மின்கம்பங்கள் சேதமடைந்தன. 64 பேர் உயிர் இழந்தனர்.பானி புயலால் பூரி மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்தது. உயர் மின்கோபுரங்கள், மின் உற்பத்தி நிலையங்களும் சேதம் அடைந்தன. இந்த நிலையில் புயல் தாக்கி பல நாட்களுக்கு மேலாகியும், பூரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லை. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடும் சேதம் அடைந்த பூரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும், விரைவில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Related Stories: