புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன தங்கம் அதே வங்கியின் அலுவலக உதவியாளர் பெயரில் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதியன்று புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த நிலையில் அதே வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து என்பவர் கோரியக்கரை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக மாரிமுத்து (42).பணியாற்றி வந்தார்.