புதுக்கோட்டை வங்கியில் கொள்ளை : மாரிமுத்து பெயரில் நிதி நிறுவனங்களில் நகைகள் அடகுவைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன தங்கம் அதே வங்கியின் அலுவலக உதவியாளர் பெயரில் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதியன்று புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த நிலையில் அதே வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து என்பவர் கோரியக்கரை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக மாரிமுத்து (42).பணியாற்றி வந்தார்.

 இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர் மாரிமுத்து அவரது உறவினர்களின் பெயர்களில் 5 கிலோ தங்கம் பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இன்னும் பல தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் மாரிமுத்து பெயரில் நகைகளை அடகு வைத்திருக்கலாம் என்பதால் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் நிதி நிறுவனங்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: