தொண்டி அருகே பாய்மர படகு போட்டி

தொண்டி : தொண்டி அருகே வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நடந்த பாய்மர படகு போட்டியில் வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கடற்கரை பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று பாய்மர படகு போட்டி நடந்தது. ஒரு படகிற்கு 7 பேர் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மொத்தம் 23 படகுகள் கலந்து கொண்டன.

 சுமார் 6 கடல் மைல் தூரம் போட்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் நம்புதாளை படகுகள் மட்டுமே கலந்துகொண்டதில் முதல் பரிசு தேவா படகும், 2வது பரிசு ருத்திர மைந்தன் படகும், 3ம் பரிசு ராமலிங்கம் படகும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: