பிரேசில்: பிரேசில், மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் வடமாநிலமான பாராவில் உள்ளது பெலம் நகரில் இயங்கிவரும் பார் ஒன்றில் நேற்று மாலை அதிகமானோர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மூன்று கார் மற்றும் ஒரு பைக்கில் வந்த ஏழு பேர் மதுபான விடுதிக்குள் புகுந்தனர். தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுவிட்டுத்தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.