சென்னை: மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று செங்கல்பட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையர் அசோக்லவாசா, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டை கண்டித்துள்ளார். தேர்தல் ஆணையர் நடுநிலைமையைத் தவறியுள்ளது. மோடியின் அசைவுபடி தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பிடியில் தேர்தல் நடந்திருப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆணையத்தை கலைப்பதற்கு சட்டரீதியாக வழிமுறைகள் இருக்கின்றதா என யோசிக்க வேண்டும்.