‘டிக்டாக்’கில் அவதூறு வீடியோ வெளியிட்ட மாணவன் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே மோட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளமான டிக்டாக் செயலியில், ஒரு சமூகத்தை பற்றி அவதூறாக பேசி இவர் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, மத்தூர் அருகே சாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டிக்டாக் செயலியில் அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியனிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மாணவனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: