பாக். அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்கியதில்  ராணுவ வீரர் காயமடைந்தார். காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குவதும்,  நமது வீரர்கள் பதிலடி தருவதும் தொடர்கிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் பலோனியில் உள்ள ராணுவ நிலை மீது கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: