தேங்காயால் குணமாகுமா? மருத்துவமனை விளக்கம்

மும்பை: சூடான தேங்காய் நீர் புற்றுநோயை குணப்படுத்தும் என்று டாடா நினைவு மருத்துவமனையின் இயக்குனரும் பிரபல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜேந்திர பட்வே கூறியிருப்பதாக சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி தவறானது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூடான தேங்காய் நீர் புற்றுநோய் செல்களை அழித்துவிடும் என்பதால் இந்த நோயில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று டாக்டர் ராஜேந்திர பட்வே கூறியதாக சமூக ஊடகத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து டாக்டரும் மருத்துவமனையும் வெளியிட்டுள்ள அறிக்கை: சூடான தேங்காய் நீர் புற்றுநோய் செல்களை அழித்து விடும் என்றும் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் இதுதான் தற்போதைய சிகிச்சை என்றும் டாடா நினைவு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராஜேந்திர பட்வே கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு போலியான செய்தி. இந்த கருத்தை டாக்டர் பட்வே அல்லது மருத்துவமனை ஏற்கவில்லை என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: