×

நான் கடவுளிடம் எனக்காக எதுவுமே கேட்கவில்லை... நாட்டு மக்களுக்காகவே கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன்: பிரதமர் மோடி பேட்டி

கேதார்நாத்: தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சென்று சாமி தரினம் செய்தார். மக்களவை தேர்தலில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான பிரசாரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம்  செய்தார். அவர் பாரம்பரிய பஹாரி உடை அணிந்து, கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.  

முன்னதாக அரைமணி நேரம், பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த கோயில் பகுதிகளின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை பிரதமர் கேதார்நாத் கோயிலுக்கு வந்து சாமி தரசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மோடி இன்று பத்ரிநாத் கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி கேதார்நாத் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி. அசோக் குமார் கூறினார்.

பனிக்குகையில் தியானம்:
பிரதமர் மோடி, உத்தரகாண்டின் பாரம்பரிய உடையான பஹாரில் கோயிலுக்கு வந்திருந்தார். மேலும், அதன் மேல் காவி துண்டை போர்த்தியபடி சிவன் கோவிலில் வழிபட்டார். பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோயிலில் உள்ள பனிக்குகையில் மோடி தியானம் மேற்கொண்டார். பிரதமரின் தியானத்தையொட்டி, கோயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் சுமார் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை குகையில் இருந்து வெளியே வந்தார்.

கேதார்நாத் புனித குகையில் 18 மணி நேர தியானத்துக்குப்பின் பேட்டியளித்த அவர்; உத்தராகண்ட் கேதார்நாத்தில் வழிபாட்டதை நான் அதிஷ்டமாக நினைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுபூர்வமாக உறவு உள்ளது. கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம், எடுப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : nationals ,Kedarnath , God, people of the country, Kedarnath, Prayer, Prime Minister Modi
× RELATED குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை அடைப்பு