×

கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு: போலீஸ் விசாரணை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் விநாயகர் கோயில் சுற்றுச்சுவரை இடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலை குமரன் குடில் சந்திப்பில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி முருகன் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலை, அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலில் தினமும் காலை, மாலை பூஜை நடப்பது வழக்கம். தற்போது, கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலையில் ஆட்டோ டிரைவர்கள், ஸ்டாண்டுக்கு வந்தபோது, சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, சுற்றுச்சுவரை இடித்தவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.


Tags : Temple ,demolition ,police investigation , Temple, Environment, Demolition, Police, Investigation
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...