தீயில் கருகிய மாநகராட்சி ஊழியர் பலி

வேளச்சேரி: சித்தாலப்பாக்கம், எம்ஜிஆர் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தசரதன் (56), சென்னை மாநகராட்சி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய ஒப்பந்த ஊழியர். கடந்த 11ம் தேதி பெரும்பாக்கம் எழில் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு செப்டிங் டேங்கை கிளீன் செய்ய சென்றார். டேங்கில் எரிவாயு உள்ளதா என பரிசோதிக்க தீக்குச்சியைக் கொளுத்தி போட்டபோது அவர் மீது தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை தசரதன் இறந்தார்.

Related Stories: