சென்னை: 4 தொகுதிகளில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தொகுதி மக்கள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். இந்த 4 தொகுதிகளின் வெற்றி தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான நெற்றித் திலகமாக அமையட்டும். ஏற்கனவே மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களும் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளன. மத்தியில் உள்ள சர்வாதிகார மோடியின் ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள மக்கள் விரோத எடப்பாடி ஆட்சியையும் அகற்றிட மக்கள் ஆர்வத்தோடு நடந்து முடிந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் சொல்லும் படியான எந்த மக்கள் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. மோடியின் அடிமையான எடப்பாடி அரசு தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் சீரழித்து விட்டது. ஓரு நாட்டின் பெருவாரியான மக்களின் வேலை வாய்ப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரியளவில் உதவி செய்துவது கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலாகும்.