தமிழருவி மணியன் பேட்டி அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததும் ரஜினி கட்சி தொடங்குவார்

தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக அரசு முடிவுக்கு வந்த அடுத்தநாள் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார். தூத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அதிமுக ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாளே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். தமிழக அரசியலுக்கு ரஜினிகாந்த் அடியெடுத்து வைக்க காரணமே கடந்த 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளையும் பாழ்படுத்தியதுதான். அதையே சிஸ்டம் சரியில்லை என குறிப்பிட்டுள்ளார் என்றார்.

Related Stories: