×

மரபணு அமைதியாக்கப்பட்டால் காயத்தின் வலி தெரியாது!

பெண்மணி ஒருவர் மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன் விளைவாக, வலி மற்றும் காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண்மணி ஜோ கேமரூன். 66 வயதான அவர், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் எனும் பிரச்னையால் அவதிப்பட்டுவந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்கு செய்யவேண்டியிருந்தது.

இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலியைத் தரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார். ஆனாலும் ஒருவழியாக சிகிச்சை மேற்கொண்டார்.
சிகிச்சையின்போது மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். அவரை ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். அங்கு அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு, அவரின் வலியற்ற தன்மைக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது.

இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாவது மட்டுமில்லாமல் வலி மற்றும் காயம் தொடர்பான அச்ச நினைவுகளும் அழிகின்றன என்பதை கண்டறிந்தனர். ஆகையால், மனதில் ஏற்படும் பதற்றம், பயம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஜோ கேமரூனைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Tags : Genetic, the pain of the injury does not know
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...