சென்னை, மே 16: மோடியை ராகுல் காந்தி சந்தித்தார் என்பதற்காக பாஜவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முடியுமா என்பதை தமிழிசை சொல்லவேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தீவிரவாதம் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் இல்லை. அனைத்து மதத்திலும் தீவிரவாதம் இருக்கிறது. மோடி தலைமையிலான 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் குறித்து பேசாமல் மக்களை சாடுவதும் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவது போன்ற தரம் தாழ்ந்த அரசியலை பிரதமர் செய்கிறார். மோடியின் பிரசாரத்தை கண்டு அனைவரும் சிரிக்கின்றனர்.