திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 3000 ஜெலட்டின் குச்சிகள், 2600 டெட்டனேட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெடிபொருட்களை எடுத்து வந்த முரளி என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.