தாம்பரம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜூ (25) மெக்கானிக். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிற்கு சென்ற ராஜூ சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதுபற்றி, சிறுமியின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று போக்சோ சட்டத்தில் ராஜூவை கைது செய்தனர்.