சென்னை: வேலை செய்த வீட்டில் 14 சவரன் நகையை திருடிய வேலைக்கார பெண்ணின் மகளை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (38). இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘எனது வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயமாகி உள்ளது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர ேவண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.