வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன்(30), விவசாயி. இவரது மனைவி சத்யா(27), கடந்த 2014ல் மாடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பகால பரிசோதனைக்காக முனியப்பனுடன் சென்றார். அப்போது, அரசின் மகப்பேறு திட்ட நிதியுதவிக்காக நர்சு பத்மாவதியிடம் அணுகியுள்ளனர்.