வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பெருமாள்பேட்டையில் கடந்த 2011-ல் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திகேயன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.