சென்னை : சென்னை துரைப்பக்கத்தில் தொழிலதிபர் முகமது தாஹீர் என்பவரிடர் ரூ. 1 கோடி கொள்ளையடித்த வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. கட்டப் பஞ்சாயத்து செய்வதற்காக அழைத்து வந்த ரவுடிகளே பணத்தை பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை பறித்த ரவுடிகள் ஜான்சன், வழக்கறிஞர் முனிராஜ் ஆகியோரை பிடிக்க நெல்லை திசையன்விளை பகுதிக்கு போலீஸ் விரைந்தது.