குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ராமகிரி-உல்லியக்கோட்டை வழித்தடத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் 7 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாளையம்-திண்டுக்கல் இடையே 7 ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு உல்லியக்கோட்டை ஆளில்லா கிராங்கில் சுரங்கப்பாதை பணி முடிவடைந்து போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சுரங்கப்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதை மிகவும் பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஆஸ்பெட்டாஷ் சீட் அமைக்கப்பட்டது.