மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக மதுடிரையை சேர்ந்த மனுதாரர் தங்க மீனாட்சி புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வேட்பாளர்கள் கொடுப்பதால் ஆரத்தி எடுக்க தடை விதிக்க வேண்டும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.