×

கொறடா புகார் குறித்து சபாநாயகரிடம் உரிய விளக்கம் அளிக்க தயார் : அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி

சென்னை :கொறடா புகார் குறித்து சபாநாயகரிடம் உரிய விளக்கம் அளிக்க தயார் என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் மனு அளித்துள்ளதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்து இருந்தார். இது குறித்து பேசியஅறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி, ஜெயலலிதாவின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்றால் சிதறி கிடக்கின்ற அதிமுக ஒன்று சேர வேண்டும்; கொறடா புகார் குறித்து சபாநாயகரிடம் உரிய விளக்கம் அளிக்க தயார் என்று கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speaker , The AIADMK, MLAs, Kondada, Rajendran, Babu, Aranthangi, Rathinasabapathy,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...