கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை : விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன்

சென்னை : கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் மனு அளித்துள்ளதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்து இருந்தார். இது குறித்து பேசிய விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், இரட்டை இலைக்கு ஆதரவாகவே இருப்போம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை; உள்நோக்கத்துடன் எங்கள் மீது கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார், என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: