மதுரை :நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டண முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்டிலைட் கோர்ஸ் எனும் பெயரில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவர் மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது.