மதுரை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய வழக்கில் ஆளுநர் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பொது மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலரும் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி தேவதாஸ் மற்றும் உறுப்பினராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக நீதிபதி தேவதாஸ் லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டதாக கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.