சென்னை : தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்ட்டது.இதில் ரத்தினசபாபதி,பிரபு,கலைச்செல்வன் மூவரும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி சமீபத்தில் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.