சபாநாயகருடன் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் திடீர் சந்திப்பு : டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையா ?

சென்னை : தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் , ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க., கொறடா புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ.,க்கள்  தமீமுன் அன்சாரி ,ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைசெல்வன்,கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோர் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: