தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பதாக ஸ்டாலின் கண்டனம்

சென்னை : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி, இப்போது பெரம்பலூரில் எதிரொலித்து உள்ளதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பதாக செய்தி வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய உரையாடல் ஆதாரங்களை வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: