விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கால்நடைகள் சுற்றுவதால் விபத்து அபாயம்

விருதுநகர் : விருதுநகர் நான்குவழி சாலை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நான்குவழிச்சாலையில் தாலுகா அலுவலகம், மேற்கு பாண்டியன் காலனி, வடமலை குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களின் வளர்ப்பு மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனத்தில் வருபவர்களும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கவனிப்பின்றி விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: