சென்னை : வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பங்கேற்றுள்ளார். ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் அரசு அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.