வடமாநிலத்தில் இருந்து தப்பி வந்த தீவிரவாதி கந்தர்ப்பதாஸ் சென்னையில் கைது

சென்னை : வடமாநிலத்தில் இருந்து தப்பி வந்த தீவிரவாதி கந்தர்ப்பதாஸ் சென்னையில் கைது செய்யப்பட்டார். அசாமைச் சேர்ந்த தீவிரவாதி கந்தர்ப்பதாஸ் அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக கந்தர்ப்பதாஸ் கடந்த 6 மாத காலம் பணியாற்றி வந்துள்ளார். நேற்று அவர் தங்கியிருந்த அறையில் உள்ளவர்களுடன் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டபோது கந்தர்ப்பதாஸ் தான் ஒரு உல்ஃபா தீவிரவாதி என்றும் எச்சரித்துள்ளார். இதையடுத்து வடமாநில போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தமிழக போலீசார் சுற்றிவளைத்து தீவிரவாதியை பிடித்தனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி கந்தர்ப்பதாஸிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: