மக்களவைத் தேர்தல் : உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையொட்டி நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணியை அவர் நடத்தினார். இன்று காலை காலபைரவர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர்.கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இந்த முறை வாரணாசியில் மட்டும் போட்டியிட உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: