காஷ்மீர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பகேந்தர் மோஹல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளின்  உடல்களும் கைப்பற்றப்பட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: