பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் மோடி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக பல்வேறு தீவிர குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருப்பினும், அவர் எந்த இடையூறும் இன்றி சுதந்திரமாக பிரசாரத்துக்கு சென்று வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்துக்குதான் நன்றி கூற வேண்டும். தேர்தல் ஆணையம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை புறக்கணித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் அவர் வரம்பு மீறி ெபண்களை பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.