×

இந்த மக்களவை தேர்தல் நமோ நமோ முழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்: மாயாவதி பேச்சு

‘‘இந்த மக்களவை தேர்தங், நமோ நமோ முழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்கும்,’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி  கூட்டணி சார்பில் கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று பிரசாரம் நடந்தது. கன்னூஜில்  நடந்த இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பேசிய மாயாவதி, “இந்த தேர்தல், பாஜவின் நமோ, நமோ முழக்கத்துக்கு  முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். காங்கிரஸ் கட்சி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கபடவில்லை. ஏழைகள் மற்றும்  அடித்தட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு பாஜ உயர்ந்த வாக்குறுதிகளை கூறிவிட்டு ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அது வெறும் வாய்வழி சேவையை மட்டும்தான் வழங்குகிறது. மீண்டும் டிம்பிள் யாதவுக்கு  வாக்களித்து அவரை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள்,” என்றார். தொடர்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “ தனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முன்னிலையில் பாஜ.வால் பேசுவதற்கு கூட முடியவில்லை. அது எப்படி  பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணியை  எதிர்கொள்ளும்? எங்களின் இந்த கூட்டணி புதிய பிரதமரை நாட்டுக்கு தரும்,” என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,Mayawati , Lok Sabha, election, Ending, Mayawati, talks
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில்...