ஒடிசாவில் 4வது மற்றும் கடைசிக்கட்ட தேர்தல் 29ம் தேதி நடக்கிறது. அங்கு அசைக்க முடியாத சக்தியாக ஆளும் பிஜேடி கட்சி இருந்தாலும், இந்தமுறை கொஞ்சமாவது கால் பதித்து விடவேண்டும் என ஆசைப்படுகிறது தாமரை. அதற்காக, பிரதமர் மோடி ெதாடங்கி அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என்று ‘ஷிப்ட்’ போட்டு மாற்றி, மாற்றி ஒடிசா வந்து பிரசாரம் செய்து ெகாண்டிருக்கிறார்கள்.எத்தனை பவுன்ஸ் போட்டாலும், லாவகமாக விலகிக் கொண்டு சிக்ஸ் அடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் போல, தாமரை தலைவர்களுக்கு செம டெரர் கொடுக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த செவ்வாய்கிழமை ேகந்திரபாரா தொகுதியில் நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. கூட்டத்தில். ‘‘இந்த முறை ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று பிஜேடி கட்சிக்காரர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் வன்முறை கலாச்சாரத்ைத கையில் எடுத்திருக்கிறார்கள். ஒடிசாவில் பாஜ அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சீக்கிரமே நான் இங்கு வருவேன்’’ என்று விளாசித் தள்ளியிருந்தார்.