ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நேற்று அளித்த பேட்டி:மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு நிச்சயமாக பெரும்பான்மை பெறாது. எனவே, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி நிச்சயமாக இருக்கும். பிராந்திய கட்சிகளான டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பிஜேடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியிலோ இடம் பெறவில்லை.