பாஜ ஆட்சிக்கு வருவதை தடுக்க எதையும் செய்வோம்: கெஜ்ரிவால் பேட்டி

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார். அதில், டெல்லிக்கு  தனி மாநில அந்தஸ்து அளிப்பது உட்பட பல்வேறு  முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு கெஜ்ரிவால் அளித்த பேட்டி: டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தருவதற்காக நாங்கள் போராடுவோம். ராகுல் காந்தியை ஒன்று கேட்க விரும்புகிறேன். எந்த கூட்டணி டிவிட்டரில் உருவானது? மோடி, அமித் ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு  ராகுல் காந்திதான் பொறுப்பு. நாட்டின் ஒற்றுமைக்கு பாஜ சவால் விட்டுள்ளது. மக்களவை தேர்தல்தான் நாட்டை காப்பாற்ற உதவ வேண்டும். மோடியும், அமித் ஷாவும் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்துவதற்காக அனைத்தையும் செய்வோம். 2019 தேர்தல்  நாட்டை காப்பற்ற வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: