பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் கோமதி (54). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கோமதி அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர், செயினை விடாமல் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கோமதியை சரமாரி தாக்கிவிட்டு, ஒரு பவுன் செயினுடன் தப்பினர்.

* செங்குன்றம் அடுத்த காந்தி நகர் ராஜயோகி தெருவை சேர்ந்த சாந்தி (50) கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று மாலை, வேலை முடிந்து புறப்பட்டார். வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் நடித்து, சாந்தியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்  அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: