டிரைவரிடம் வழிப்பறி

அண்ணாநகர்: அமைந்தகரை சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பாரி (36), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு சவாரி முடிந்தவுடன், ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், பாரி வைத்திருந்த செல்போன் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை நைசாக எடுத்துள்ளனர். திடுக்கிட்டு எழுந்த பாரி, அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பாரியை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது செல்போன் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பினர். புகாரின் பேரில், அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: