மலேசியா, இலங்கையில் இருந்து கடத்தி வந்த 6 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: மலேசியா, இலங்கையில் இருந்து 6 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தி வந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பேட்ரிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையது இப்ராகிம் (39) என்பவர் சுற்றுலா பயணியாக மலேசிய நாட்டிற்கு சென்று, சென்னை திரும்பி வந்தார். இவருடைய உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர். ஆனால், அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது, அவரது ஆசன வாய்க்குள் தங்க கட்டி மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன் எடை 100 கிராம். இதன் மதிப்பு ₹3 லட்சம். இதையடுத்து தங்க கட்டியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதற்கிடையே நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொழும்புவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது (28) என்பவரை  சோதித்தபோது அவரது ஆசன வாய் பகுதியில் ஒரு தங்க கட்டியை மறைத்து  வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் எடை 100 கிராம், இதன் மதிப்பு 3 லட்சம்.  இதையடுத்து சுங்க அதிகாரிகள், அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இரண்டு பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: