மே தினமான 1ம் தேதி டாஸ்மாக் விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: “மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற 1ம் தேதி விடுமுறை” என்று சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:வருகிற 1ம் தேதி (புதன்கிழமை) மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘‘எப்எல்1’’ மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், ‘‘எப்எல்2’’ உரிமம் கொண்ட கிளப்களைச் சார்ந்த பார்கள், ‘‘எப்எல்3’’ உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் ‘‘எப்எல் 3 (ஏ)’’ உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: