மதுரை: உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள், மாற்று வழியில் திட்டப்பணியை செயல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புகழுர் - திருவலம் வரை 50 சதவீதத்திற்கு மேல் உயர் அழுத்த மின் வழிப்பாதை அமைக்கும் பணி முடிந்திருந்தால் பணியை தொடரலாம் என்றும் 50 சதவீதத்திற்கு குறைவாக பணி நடைபெற்றிருந்தால் பணியை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.