வெடிப்பொருளை கடித்த பசுமாடு முகம் சிதறியது

மேச்சேரி: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வாளியூர் கொட்டகை பகுதியை சேர்ந்தவர் தர்மன்(50), விவசாயி. இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம், ஆடு, கோழி மற்றும் பசு மாடு உள்ளது. இவரது நிலத்திற்கு பின் பகுதியில் கரடு உள்ளது.  இங்கு அதிகளவில் காட்டுப்பன்றிகள் உள்ளது. இந்நிலையில் தர்மனுடைய பசு மாடு மேய்ச்சலுக்காக காட்டுபகுதிக்கு சென்றது. இந்நிலையில், காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் வைத்திருந்த வெடிப்பொருளை பசுமாடு சாப்பிட்டதால் பயங்கர வெடிச்சத்துடன் மூகம் சிதறி விழுந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் பசுமாட்டினை மீட்டு முதலுதவி செய்து வருகின்றனர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: