நாங்குநேரி: கல்லூரி படிப்பை பெற்றோர் நிறுத்தி விடுவார்கள் என்பதால் வழிப்பறி சம்பவத்தை பெற்றோரிடம் மறைத்த நாங்குநேரி மாணவி, கவரிங் நகை வெளுத்ததால் குட்டு அம்பலமானது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்தவர் ஸ்டெல்லா(19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவார்.
கடந்த டிசம்பர் 28ம்தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்டெல்லா, தனது மொபட்டில் தங்கை மற்றும் தம்பியை அழைத்துக் கொண்டு மீனவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி ேடால்கேட் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் வந்த இருவர், ஸ்டெல்லாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.7500 ஆகும்.