மும்பை: 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி அப்துல்கானி தர்க் உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவால் நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல்கானி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைபெற்ற அப்துல்கானி நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.