ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாக் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறையினர் திட்டமிட்டனர்.