கிறிஸ்ட்சர்ச்: உலக அளவில் இணைய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு நியூசிலாலந்தும் ஃபிரான்சும் இணைந்து முக்கிய முயற்சிகளை எடுக்க இருக்கின்றன. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில், கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இணைய தீவிரவாதம் மூலம் அரங்கேற்றப்பட்டதற்காக கூறப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டுவதையும் பிரசாரம் செய்வதையும் நிறுத்த, நியூசிலாந்தும் ஃபிரான்சும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்தாலோசிக்க போவதாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.